Monday, 28 March 2016

ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதி


இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மொஹாலியில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 ஆட்டத்தில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸி. நிர்ணயித்த 161 ரன்கள் இலக்கை இந்தியா 19.1 ஒவர்களில் விரட்டியது.
இந்திய அணி வழக்கம் போல துவக்க வீரர் ஷிகர் தவானை 13 ரன்களுக்கு இழந்தது. அடுத்து களமிறங்கிய கோலி, தான் சந்தித்த 2-வது மற்றும் 3-வது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ரெய்னாவும் 10 ரன்களுக்கு வெளியேற இந்திய அணி 8 ஓவர்களில் 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.


யுவராஜ் சிங் - கோலி இணை சிறிது நம்பிக்கை அளித்தாலும் தேவைக்கேற்ப ரன் சேர்க்க இருவரும் போராடினர். சிறப்பாக ஆடி வந்த யுவராஜ் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். 36 பந்துகளில் 67 ரன்கள், ஓவருக்கு சராசரி 11 ரன்களுக்கு மேல் தேவை என்ற நிலையில் தோனியும் கோலியும் களத்தில் இணைந்தனர்.
15, 16 மற்றும் 17-வது ஓவர்களில், ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்தாலும் தேவைப்படும் ரன்ரேட் இறங்குமுகம் காட்டவில்லை. ஃபால்க்னர் வீசிய 18-வது ஓவர் ஆட்டத்தின் தலைவிதியை மாற்றும்படி அமைந்தது.
18-வது ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கும், மூன்றாவது பந்தை சிக்ஸருக்கும் விளாசிய கோலி அடுத்த 2 பந்துகளில் மேலும் 3 ரன்கள் எடுக்க, கடைசி பந்தில் தோனி 2 ரன் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் சேர, 2 ஓவர்களில் 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது. இந்திய அணியின் மீது இருந்த அழுத்தமும் குறைந்தது.
ஆனால் கோலியின் விளாசல் நின்றபாடில்லை. கோல்டர் நீல் வீசிய அடுத்த ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்து மேலும் 16 ரன்கள் தேடித்தர, கடைசி ஓவரில் இந்திய அணிக்கு வெறும் 4 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாயிருந்தது.
20-வது ஓவரின் முதல் பந்தை தோனி பவுண்டரிக்கு விரட்ட, இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸி. அணி டி20 உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது.
முடிவில் விராட் கோலி 51 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்திருந்தார், தோனி 10 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களை எடுத்திருந்தார். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Thursday, 24 March 2016

பரபரப்பு ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில், இந்திய அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளுக்கு 136 ரன்களை எடுத்திருந்தது. களத்தில் மஹமதுல்லாவும், முஸ்தஃபிர் ரஹிமும் இருக்க, பாண்டியா பந்துவீசினார்.
முதல் பந்தில் மஹமதுல்லா 1 ரன் எடுக்க, அடுத்த இரண்டு பந்துகளும் பவுண்டரிக்கு விரைந்தது. ஆட்டம் முடிந்தது, வங்கதேசம் வென்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை பாண்டிய எடுக்க, ஆட்டம் மீண்டும் பரபரப்பானது.
கடைசி பந்தில் 2 ரன்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலையில், ஷுவகதா ஹோம் எதிர்கொண்டார். பாண்டியா வீசிய பந்து மட்டைக்கு எட்டாமல், ஆஃப் ஸைட் உயர சென்று தோனியின் கைகளில் தஞ்சமடைந்தது. பந்தை அடிக்கவில்லையென்றாலும் ரன் எடுக்க இரண்டு பேட்ஸ்மென்களும் விரைந்தனர். கையில் உறை அணியாமல் இதற்காகவே காத்திருந்த தோனி, பந்தை பிடித்து ஓடி வந்து உடனடியாக ரன் அவுட் செய்தார். இதனால் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி கண்டது.



இந்தியா நிர்ணயித்த 147 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு துவக்க வீரர் தமீம் இக்பால் சரியான துவக்கத்தைத் தந்தார். மற்றொரு துவக்க வீரர் மிதுன் சீக்கிரம் ஆட்டமிழந்தாலும், தமீம் இந்தியாவின் பந்துவீச்சுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்தார். முக்கியமாக பும்ரா வீசிய 6-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.
தமீம் இக்பால் ஜடேஜாவின் பந்துவீச்சில் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க பொறுப்பாக ஆடிவந்த சபீர் ரஹ்மானும் 26 ரன்களுக்கு ரெய்னாவின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார். 10 ஓவர்களில் 70 ரன்கள் தேவையாயிருக்க வங்கதேசத்தின் வசம் 7 விக்கெட்டுகள் இருந்தது.
ஆனால் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் வங்கதேசத்தின் ரன் சேர்ப்பு வேகத்தை நெருக்கினர். தொடர்ந்து மொர்டாஸா, ஷகிப் அல் ஹசன் இருவரும் ஆட்டமிழக்க, சவும்யா சர்க்கார், அணியை வெற்றி பெறச் செய்யும் முனைப்பில் ஆடிவந்தார்.
அவரும் 18-வது ஓவரில் நெஹ்ராவின் பந்துவீச்சில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதுவரை அதிக ரன்கள் தந்துவந்த பும்ரா, தனது கடைசி ஓவரில் 6 ரன்களை மட்டுமே கொடுக்க, வங்கதேச அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவையாயிருந்தது.
ஜடேஜா, அஷ்வின் இருவரும் 4 ஓவர்கள் வீசி முறையே 22 ரன்களும், 20 ரன்களும் தந்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
                                                                             thanks the hindu tamil

Saturday, 19 March 2016

இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை: வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் தோனி குழுவினர்

டி 20 உலகக் கோப்பையில் குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
கோப்பையை வெல்லும் அணியாக கருத்தப்படும் தோனி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் நியூஸி லாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது. அரையிறு திக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
டி 20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை பாகிஸ்தான் தோற்கடித் தது. இதன் மூலம் தங்களை யாரும் எளிதில் கணிக்க முடியாது என்பதை பாகிஸ்தான் அணி மீண்டும் நிருபித்தது.
பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்கள் எங்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளனர் என்று கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய அப்ரீடி 32 பந்தில் 49 ரன் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.


மொகமது ஹபீஸ், அகமத் ஸெஷாத் ஆகியோரும் பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு வலுசேர்த்துள்ளது. இந்த கூட்டணி வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 68 பந்தில் 95 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. இவர்களுடன் ஷர்ஜீல்கான், ஷோயிப் மாலிக், உமர் அக்மல் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களான உள்ளனர்.
மொகமது அமீர், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ் வேகப்பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர். சுழற்பந்து வீச்சில் அப்ரீடியுடன் இமாம் வாசிம் பலம் சேர்க்கக்கூடும்.
கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி உள்ளதால் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்கும் பட்சத்தில் விராட் கோலி, ரெய்னா, தோனி, யுவராஜ்சிங், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பதில் சிரமம் இருக்காது.
பந்து வீச்சில் ஆஷிஸ் நெஹ்ரா, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் கடந்த சில மாதங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் இவர்களிடம் இருந்து மீண்டும் கட்டுக்கோப்பான பந்து வீச்சை எதிர்பார்க்கலாம்.
டி 20 உலகக் கோப்பைபோட்டியை நடத்தும் நாடு கோப்பையை வென்ற தில்லை என்ற வரலாறு உள்ள நிலையில் இன்றைய ஆட்டம் இந்திய அணியின் தலைவிதியை நிர்ணயிப்பதாக இருக்கும்.
அணிகள் விவரம்:
இந்தியா:
தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், அஜிங்க்ய ரஹானே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், பவன் நேகி, முகமது ஷமி.
பாகிஸ்தான்:
அப்ரீடி (கேப்டன்), மொகமது ஹபீஸ், ஷோயிப் மாலிக், மொகமது இர்பான், ஷர்ஜீல் கான், வஹாப் ரியாஸ், முகமது நவாஸ், முகம்மது சமி, காலித் லத்தீப், மொகமது அமீர், உமர் அக்மல், சர்ப்ராஸ் அகமது, இமாத் வாசிம், அன்வர் அலி, குர்ராம் மன்சூர்.
நேரம்: இரவு 7.30 இடம்: கொல்கத்தா
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
தோற்றதில்லை
பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப் பையில் இதுவரை இந்தியாவை வென்றதில்லை. 2007, 2012, மற்றும் 2014-ம் ஆண்டு உலகக்கோப்பைகளில் நேருக்கு நேர் மோதி தோல்வியை சந்தித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ராசி
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பாகிஸ்தான் அணிக்கு ராசியானதாக அமைந்துள்ளது. அந்த அணி இங்கு இந்தியாவுக்கு எதிராக மோதிய 4 ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள் ளது. மேலும் தற்போது டி 20 உலகக் கோப்பையை வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியுடனும் தொடங்கி யுள்ளது.

Thursday, 17 March 2016

'2.0' அப்டேட்: டெல்லியில் படமாக்கப்படும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி


ரஜினி மற்றும் அக்‌ஷய்குமார் பங்கேற்கும் ஒரு பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை டெல்லியில் படமாக்க இருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'கபாலி' மற்றும் '2.0' என இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. 'கபாலி' படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டாலும், விரைவில் டப்பிங் பணிகள் துவங்கப்பட இருக்கிறது.


ரஜினி, ஏமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தொடர்ந்து ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியை படமாக்க படக்குழு திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய டாங்குகள் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் வருவது போல சிலவற்றை படக்குழு படமாக்கியது.
தற்போது அந்த டாங்குகள் எல்லாம் ஒரு கிரிக்கெட் மைதானத்திற்கு வருவது போலவும், அங்கு பல்வேறு கார்கள் எல்லாம் வைத்து ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியை படமாக்க இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். டெல்லியில் உள்ள மைதானத்தில் இச்சண்டைக் காட்சிகள் நாளை (மார்ச் 17) முதல் துவங்க இருக்கிறார்கள். 40 நாட்கள் நடைபெற இருக்கும் இப்படப்பிடிப்பில் ரஜினி மற்றும் அக்‌ஷய்குமார் இருவரும் பங்கேற்க இருக்கிறார்கள்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படம் முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. இந்திய அளவில் 3டி தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு வரும் முதல் படம் '2.0' என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, 13 August 2015

பகுதி நேரத்தில் மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி?

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உலகில் புதிய மாற்றத்தை காணமுடிகிறது.பெய்ட்வெர்ட்ஸ்(PAIDVERTS) புதிய தனித்துவமான PTC இணையதளம். நாம் பல வருடங்களாக இணையத்தில் பணம் சம்பாதிக்க பயன்படுத்தி வரும் மற்ற PTC இணையதளங்களை போல் அல்லாமல் முற்றிலும் வித்தியாசமானது.
பெய்ட்வெர்ட்ஸ் PTC உலகின் புதிய புரட்சி என்றே சொல்லலாம் ஏனென்றால் தனது உறுப்பினர்கள் கிளிக் செய்து பார்க்கும்ஒவ்வொரு விளம்பரத்திற்கும் குறைந்தபட்சம் $0.0005 முதல் அதிகபட்சம் $200 டாலர் மதிப்புடைய விளம்பரங்களை தருகிறார்கள் ( இந்திய ரூபாயின் மதிப்பில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் குறைந்தபட்சம் 3 பைசா முதல் அதிகபட்சம் ஒரு விளம்பரத்திற்கு ரூபாய் 12000 வரை ) இது நீங்கள் தற்போது பணம் சம்பாதிக்க பயன்படுத்தும் மற்ற PTC இணையதளங்களை விட பல மடங்கு அதிகம்.
பெய்ட்வெர்ட்ஸ் ஆன்லைனில் செயல்படும் விளம்பர களம்.விளம்பரதாரர்களின் விளம்பரங்களை சில வினாடிகள் கிளிக் செய்து பார்பதற்காக உங்களுக்கு பணம் வழங்கபடுகிறது. பெய்ட்வெர்ட்ஸ் கிரவுட் பண்டிங் முறையில் உருவாக்கப்பட்டது. மைடிராபிக்வேல்யூ.காம் இணையதளத்திற்கு சொந்தமானது. 31 மார்ச் 2014 முதல் ஆன்லைனில் செயல்படுகிறது.
 உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை யூசர் நேம் , ஈமெயில் முகவரி , கடவுச்சொல் மற்றும் உங்களது பிறந்த தேதியை உள்ளீடு செய்யவும். மீண்டும் ஒருமுறை வலது பக்கம் உங்களது பிறந்த தேதியை உறுதி செய்யவும். பிறகு Open Account கிளிக் செய்யவும்.
Paidverts-logo
வழிமுறை   1.  மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .
வழிமுறை   2.  இடது மேற்புறம் உள்ள “Register” என்பதை கிளிக் செய்யவும்.
வழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை யூசர் நேம் , ஈமெயில் முகவரி , கடவுச்சொல் மற்றும் உங்களது பிறந்த தேதியை உள்ளீடு செய்யவும். மீண்டும் ஒருமுறை வலது பக்கம் உங்களது பிறந்த தேதியை உறுதி செய்யவும். பிறகு Open Account கிளிக் செய்யவும்




பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தில் பணம் சம்பாதிக்க துவங்குவதற்கு முன் அதில் பயன்படுத்த கூடிய மிக முக்கிய சொற்கள் / வார்த்தைகள் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும்.
போனஸ் விளம்பர புள்ளிகள் : பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தின் முக்கிய அம்சம். உங்களின் உறுப்பினர் கணக்கில் இருக்கும் எண்ணிக்கையை பொறுத்தே உங்களின் வருமானம் நிர்ணயிக்கபடுகிறது.
1. போனஸ் விளம்பர புள்ளியின் மதிப்பு $0.0005 பெய்ட்வெர்ட்ஸ் PTC இணையதளத்தில் இரண்டு வகையான விளம்பரங்கள் உள்ளன.
1.  ஆக்டிவேசன் விளம்பரங்கள்.
2.  பணம் கொடுக்கும் விளம்பரங்கள்.
உங்களுக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் உங்களிடம் போனஸ் விளம்பர புள்ளிகள் கட்டாயம் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் ஆக்டிவேசன் விளம்பரத்தை கிளிக் செய்து பார்க்கவேண்டும்.
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆக்டிவேசன் விளம்பரத்திற்கும் உங்களுக்கு 25 போனஸ் விளம்பர புள்ளிகள் வழங்கப்படும்.புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஆரம்பத்தில் தினமும் 16 ஆக்டிவேசன் விளம்பரங்கள் வழங்கபடுகிறது. இதன் மூலம் தினமும் உங்களுக்கு 400 போனஸ் விளம்பர புள்ளிகள் கிடைக்கும்.மொத்தம் 100 ஆக்டிவேசன் விளம்பரங்களை பார்த்த பிறகு தினசரி 8 ஆக்டிவேசன் விளம்பரங்கள் மட்டுமே கிடைக்கும்.
நீங்கள் முழுமையாக ஆக்டிவேசன் விளம்பரங்களை கிளிக் செய்த பிறகு உங்களின் பெய்ட்வெர்ட்ஸ் உறுப்பினர் கணக்கில் உள்ள போனஸ் விளம்பர புள்ளியின் மதிப்பிற்கேற்ப உங்களுக்கு பணம் கொடுக்கும் விளம்பரங்கள் வழங்கபடுகிறது.
உதாரணத்திற்கு உங்களிடம் 2000 போனஸ் விளம்பர புள்ளிகள் இருந்தால் உங்களுக்கு $1 மதிப்புள்ள விளம்பரங்கள் வழங்கப்படும். உங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களை 18 மணி நேரத்திற்குள் கிளிக் செய்து பார்த்து விட வேண்டும்.இல்லையென்றால் அந்த விளம்பரம் மற்ற உறுப்பினர்களுக்கு சென்றுவிடும்.
உங்களுக்கு வழங்கப்படும் விளம்பரத்தின் பண மதிப்பிற்கேற்ப உங்களின் போனஸ் விளம்பர புள்ளியும் குறைந்துவிடும். எடுத்துகாட்டு உங்களுக்கு $0.01 விளம்பரம் வழங்கப்பட்டால் 20 போனஸ் விளம்பர புள்ளிகள் உங்களின் பெய்ட்வெர்ட்ஸ் கணக்கில் இருந்து குறைந்துவிடும்.
போனஸ் விளம்பர புள்ளிகளை மூன்று வழிகளில் பெறலாம்
1.   ஆக்டிவேசன் விளம்பரங்கள் கிளிக் செய்து பார்ப்பதன் மூலமாக பெறலாம்.
2. விலைக்கு வாங்குவதன் மூலமாக $1 முதலீடு செய்தால் உங்களுக்கு 3100 போனஸ் விளம்பர புள்ளிகள் கிடைக்கும். அதன் மதிப்பு $1.55.
3. போனஸ் விளம்பர விளையாட்டுகள் மூலமாக.
உங்களுக்கு அதிக மதிப்பிலான பணம் வழங்கும் விளம்பரங்கள் கிடைக்க வேண்டுமென்றால் கட்டாயம் அதிக எண்ணிக்கையிலான போனஸ் விளம்பர புள்ளிகள் இருக்க வேண்டும்
பெய்ட்வெர்ட்ஸ் சிறப்பம்சங்கள்.
  • நேர்மையாக பணம்வழங்குகிறது.
  • பெய்ட்வெர்ட்ஸ் PTCஇணையதளத்தில் பணத்திற்காக காத்திருக்கும் நேரம் 7 நாட்கள் என்ற போதிலும் தனது உறுப்பினர்களுக்கு 1 முதல் 3 நாட்களுக்குள் பணம் வழங்கபடுகிறது. கிழே நான் பணம் பெற்றதற்கான ஆதாரங்களை காணலாம்
  • நீங்களும் எங்களைப்போல் பெய்ட்வேர்ட்ஸ் மூலம் சம்பாதிக்க விரும்பினால் கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்து உங்கள் கணக்கைத் தொடங்கி உங்கள் வருமானத்தை பெற வாழ்த்துக்கள்.
Paidverts-logo

Tuesday, 28 July 2015

youtube கு பிறகு பணம் தரும் ஒரே சமூக வலைத்தளம்

youtube கு பிறகு பணம் தரும் ஒரே சமூக வலைத்தளம் லட்சகணக்கான தமிழர்கள் இணைந்திருக்கும் TSU ,
-நீங்கள் போடும் போஸ்ட், லைக் ,கம்மென்ட்கு பணம் ,குறைவான ஆங்கில அறிவே போதுமானது,
-facebook ,twitter இரண்டும் இணைந்ததுதான் tsu ,
-தினமும் 1 மணி நேரம் போதுமானது ,
-6 மாதத்தில் 4 மில்லியன் மக்களுக்கும் மேல் இணைந்த ஒரே சமூக வலைத்தளம்.
-இதுவரை எங்களுக்கு கிடைத்த பணம் ரூ 13,500/-.
-facbook இல் வாழ்நாள் முழுதும் போஸ்ட் போட்டால் கூட ஒன்றும் கிடைக்காது ,
-tsu வில் இணைந்துகொள்ள இங்கே க்ளிக்செய்யவும்  

 www.tsu.co/ersiva2020

TSU என்பது Facebook  போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடி கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook இல் அங்கு உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook க்கே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.  

Wednesday, 11 March 2015

இனி மனிதனின் ஆயுள் 500 ஆண்டுகள்!

கலிபோர்னியா:  மனிதர்களின் வாழ்நாளை அதிகபட்சமாக 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்று கூறி கூகுளின் புதிய ஆய்வுகளுக்கான தலைமை அதிகாரி பில்மார்ஸ் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.



கூகுள் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறை தவிர மற்ற பிற துறைகளிலும் பெரும் முதலீடுகளைச்  செய்து தீவிர ஆராய்ச்சியில்  ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மரபணு, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மற்றும் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிப்பது அதாவது முதுமையைத்  தடுக்கும் துறைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.



இந்த ஆய்வுகளை தலைமையேற்று நடத்திவரும் பில் மார்ஸ் இந்த ஆய்வு பற்றி கூறுகையில், "மனிதர்களின் வாழ்நாட்களை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம். மரணத்தைத் தடுக்க முடியாது. ஆனால், கண்டிப்பாக நீண்ட நாட்கள் வாழ வைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை மனிதர்களின் ஆயுளை 120 ஆண்டுகள் வரை நிச்சயமாக நீட்டிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில், கூகுள் அதை 500 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என கூறியிருப்பது அனைவரையும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது.